என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெண்களால் இயங்கும் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் மையம்
நீங்கள் தேடியது "பெண்களால் இயங்கும் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் மையம்"
பஞ்சாப் மாநிலத்தில் முழுக்க பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா இன்று தொடங்கி வைத்தார். #PostOfficePassportSevaKendra
சண்டீகர்:
பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா நகரில் தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய மந்திரி விஜய் சம்ப்லா இன்று தொடங்கி வைத்துள்ளார்.
நாட்டின் 192வது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையம் ஆக செயல்படும் இதற்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இந்த சேவை மையம் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்பட உள்ளது. இங்கு அனைத்து ஊழியர்களும் பெண்களாக பணியாற்றுகின்றனர். இதுபற்றி மந்திரி விஜய் சம்ப்லா கூறுகையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜலந்தர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கில் கூறுகையில், பாஸ்போர்ட் துறையின் ஆய்வு அதிகாரி மாதுரி பவி தலைமையில் பக்வாரா மையம் இயங்கும். அஞ்சலக உதவியாளர்களாக இரு பெண் ஊழியர்கள் செயல்படுவர் என கூறியுள்ளார். ஜலந்தர் அலுவலகத்தில் பாஸ்போர்ட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். #PostOfficePassportSevaKendra
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X